Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இலங்கை மாஜி காவல்துறை தலைவருக்கு மரண தண்டனை

கொழும்பு: இலங்கையில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அப்போதைய உயர் அதிகாரியான ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாக்குதல்களைத் தடுத்திருக்கக்கூடிய முன்கூட்டிய உளவுத் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம், இவர்கள் இருவரும் குற்றவியல் ரீதியான கடமை தவறிய குற்றவாளிகள் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயசுந்தர மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் 2019ல் கைது செய்யப்பட்டு, நான்கு மாதங்கள் காவலில் வைக்கப்பட்ட பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 2021 நவம்பரில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் 2022 பிப்ரவரியில், உயர் நீதிமன்றம் அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததுடன், அவர்கள் மீதான 855 குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2024 நவம்பரில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. 2 நீதிபதிகள் மரண தண்டனை விதிக்க மற்றொரு நீதிபதி இருவரையும் விடுதலை செய்தார். காவல்துறையின் 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், தண்டனை விதிக்கப்பட்ட மிக மூத்த காவல்துறை அதிகாரி ஜெயசுந்தர ஆவார்.