தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது

Advertisement

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் வெப்சைட் உருவாக்கும் நிறுவனத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரான வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது செய்யப்பட்டார். சென்னை துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பிரதான சாலையில் வெப்சைட் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த தரணிதரன் (34), திருவான்மியூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (34) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிறுவனம் நேற்று அரை நாள் மட்டுமே இயங்கியுள்ளது. அப்போது, தரணிதரனும் ஹரிஹரனும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் திடீரென நிறுவன உரிமையாளர் மீராவை தரணிதரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘எனக்கும் ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டது. நான் தள்ளிவிட்டதில் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவில்லை’ என்று கூறியுள்ளார். இதனால் பயந்துபோன மீரா, துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 108 ஆம்புலன்சும் வரவைக்கப்பட்டது. பரிசோதனையில், ஹரிஹரன் இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தரணிதரனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஒரே நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்த தரணிதரனின் முன்னாள் காதலியிடம் ஹரிஹரன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தரணிதரன், துரைப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்து மீண்டும் ஹரிஹரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரனும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. போதை தலைக்கு ஏறியதில் ஆத்திரமடைந்த தரணிதரன், ஹரிஹரனின் மார்பு மற்றும் வயிற்றில் பலமாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த ஹரிஹரன் சாலையில் விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் எழுந்து வராததால் பயந்துபோன தரணிதரன், நிறுவன உரிமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிதரனை கைது செய்தனர். கைதான தரணிதரனின் தந்தை ஆரோக்கியசாமி புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் என்பது குறிப் பிடத்தக்கது. வெப்சைட் உருவாக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியிலும், ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News