தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் இருந்து வேனில் கடத்திய ரூ.4 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

Advertisement

*வேலூர், ஆம்பூரை சேர்ந்த 2 பேர் கைது

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து வேலூர் மற்றும் ஆம்பூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எஸ்.பி. ஸ்ரேயாகுப்தா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு நேற்று வேன் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக எஸ்பி ஸ்ரேயா குப்தாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் அருகே எஸ்பி தனிப்படை போலீசார் மற்றும் அம்பலூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 630 கிலோ போதை புகையிலை பொருட்கள் இருந்தது. இதுதொடர்பாக அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வேலூரை சேர்ந்த சரவணன் (55), ஆம்பூரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பதும் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement