Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்புடைய இந்தியர் கைது: எப்பிஐ அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரில் நெடுஞ்சாலை ரோந்து படையினரால் இந்தியரான ஹர்மன் வீர்சிங்(31) என்பவர் கைது செய்யப்பட்டார். கனடாவில் உள்ள வான்கூவரில் இருந்து செயல்படும் ரவீந்தர் சிங் தண்டாவின் கும்பலுடன் தொடர்புடைய ஹர்மன் வீர் சிங்கை போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோகைன், மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்களைக் கடத்தலில் கொடி கட்டி பறப்பவர் ரவீந்தர் தண்டா.போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி ஹர்மன்வீர்சிங்குக்கு எதிராக அமெரிக்க பெடரல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹர்மன்வீர்சிங்கிடம் எப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது.