தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகலூர் சர்க்கிள் பகுதியில் சிதிலமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Advertisement

*சீரமைக்க கோரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிள் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிள் ரவுண்டானா சாலை பேரிகை, மாலூர், சர்ஜாபுரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பாகலூர் சர்க்கிள் ரவுண்டானாவை சுற்றிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

அதேபோல் ஓசூர், பேரிகை மற்றும் மாலூர் சாலைகளும் சிதிலமடைந்து, பல்வேறு இடங்களில் சாலை நடுவே ஒரு அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். பாகலூரிலிருந்து செல்லும் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் சிறு சிறு விபத்தில் சிக்கி வருகின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வளர்ந்து வரும் பகுதியான பாகலூரையொட்டி, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளது. இதன் வழியாக தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களில் உதிரி பாகங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.

அதேபோல் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி மற்றும் மலர்களை வாகனங்களில் இந்த வழியாக கொண்டு செல்கின்றனர். பாகலூரிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகள், கடந்த ஓராண்டுக்கு மேலாக சிதிலமடைந்து காணப்படுவதால், இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News