தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால் காய்ந்து வீணான 50 டன் கரும்புகள்: விவசாயி வேதனை

 

Advertisement

 

திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால், 50 டன் கரும்பு காய்ந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2025-26ம் ஆண்டு அரைவைப் பருவத்திற்கு 2051 விவசாயிகளிடமிருந்து 7505 ஏக்கர் கரும்பு, ஆலைக்கு பதிவு செய்யப்பட்டு 2 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரைவை செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கரும்பு விவசாயிகள் முன்பதிவு செய்தனர். பதிவு செய்ததின் அடிப்படையில் கரும்பு விவசாயிகளிடமிருந்து வாகனம் மூலம் கரும்பை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கரும்பு விவசாயி, தனது 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கடந்த 7ம்தேதி கரும்பை அரவைக்கு தயாராக வைத்திருக்க ஏதுவாக வெட்டி தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால், கூலி ஆட்களைக் கொண்டு கிட்டத்தட்ட 4 நாட்களாக 50 டன் எடை கொண்ட கரும்பை வெட்டியுள்ளனர். ஆனால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து வாகனத்தை அனுப்பி கரும்பை எடுத்துச் செல்லாததால், 50 டன் கரும்பு காய்ந்து போனது. கடன் வாங்கி கரும்பு பயிர் செய்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் கரும்பு வீணாவதாக விவசாயி கார்த்திகேயன் குற்றம் சாட்டினார்.

250 டன் கரும்பு தருவதாக பதிவு செய்த நிலையில், 50 டன் கரும்பு காய்ந்து போனதால் விரக்தியடைந்த விவசாயி கார்த்திகேயன் ஆலை நிர்வாகத்திடம் பேச முயன்றபோது, யாரும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. முறையாக நிர்வாகம் செய்யாததும், இதுபோன்ற குளறுபடிக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், ஆந்திராவில் இருந்தும் கரும்பை பெறும் ஆலை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து கரும்பை பெறாதது ஏன் என்றும் குற்றம் சாட்டினர்.

Advertisement

Related News