தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரட்டைத்தாளீஸ்வரர் கோயில் லட்சதீப பெருவிழா கோலாகலம்

Advertisement

உத்திரமேரூர்: உத்திரமேரூர், இரட்டைத்தாளீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் லட்சதீப பெருவிழா கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று பஜார் வீதியில் உள்ள மனோன்மணி அம்மை சமேத ஸ்ரீ இரட்டைத்தாளீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் லட்சதீப பெருவிழா நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது.

விழாவையொட்டி, காலை கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர், இரட்டைதாளீஸ்வரர் மற்றும் மனோன்மணி அம்மையருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாலை பக்தர்கள் கோயில் முழுவதும் எலும்மிச்சைக் கொண்டு நெய் தீபம் ஏற்றி சாமியை வழிபட்டனர். கோயில் முழுவதும் ஏற்றப்பட்ட தீபமானது கோயில் முழுவதும் பிரகாசமாக ஜொலித்து ரம்யமாக காட்சியளித்தது.

இதைத்தொடர்ந்து, ஆன்மீக இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவையொட்டி, கோயிலில் நாள் முழுவதும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஞானமணி உட்பட கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News