தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

Advertisement

வேளச்சேரி: வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த, 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெரும்பாக்கம், எழில் நகர், 41வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவரும் மீன் கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் குடியிருக்கும் 3வது மாடியின் வீட்டு வாசலில் கலைவாணன் போதையில் படுத்து தூங்கியுள்ளார்.

இரவு 11.50 மணிக்கு கலைவாணன் அலறும் சத்தம் கேட்டு, அவரது மனைவி சவுந்தர்யா வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது, தலை நசுங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். அவரது அருகில் அம்மிக்கல் ஒன்றும் கிடந்துள்ளது. தகவலறிந்த பெரும்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கலைவாணன் மனைவி சவுந்தர்யா பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், கடந்த 3 மாதத்திற்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சரளா மகன் வசந்த் (21) மற்றும் உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் (எ) வெள்ளை சந்தோஷ், அருண் உள்பட 5 பேரை தேடி வருகிறார்கள்.

கொலையான கலைவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது, என தெரிய வந்துள்ளது.  மேலும், அப்பகுதியில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசுக்கு கலைவாணன் தகவல் கொடுத்ததால் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Related News