தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் சாவு; தம்பதி கதறல்

Advertisement

தர்மபுரி: தர்மபுரி அருகே பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்து குதறியதில், 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி அருகே தடங்கம் பெருமாள்கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன்- முனியம்மாள் தம்பதியினர், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, அங்கேயே காவலுக்கு படுத்து உறங்குவது வழக்கம். நேற்று முன்தினம், மேய்ச்சலுக்கு பின்பு, ஆடுகளை பட்டியில் அடைத்தனர். அப்போது, மழை பெய்ததால் இரவில் அங்கு தங்க வழியின்றி, வீட்டிற்கு வீட்டிற்கு சென்று விட்டனர்.

நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது, 13 ஆடுகள் குடல் சரிந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. அதனைக்கண்டு தம்பதி கண்ணீர் வடித்தனர். இரவு நேரத்தில் பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement