தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன் உறுதி

Advertisement

கோவை: திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது துணை முதல்வர் தொடர்பாக சர்ச்சையான கருத்தை ஆதவ் அர்ஜூன் எழுப்பியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்து திருமாவளவன் கூறும்போது, ‘‘திமுக-விசிக இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த சலசலப்பும் இல்லை. அதுபோல் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சின்ன வீடியோ ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக்கொண்டனர். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதத்திற்கு இடம் அளித்துள்ளது.

அதனால் திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார். ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டபோது, ‘‘இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். உட்கட்சி விவகாரங்களில் பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக நான் பேசி உள்ளேன். கலந்து ஆலோசித்து பேசி முடிவெடுப்போம்’’ என்றார். தொடர்ந்து திருப்பதி லட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

Advertisement

Related News