தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு வணிகத்தை முறைப்படுத்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

Advertisement

 

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்ெசயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் மற்றும் சில்லறை உரிமம் பெற்று சுமார் 15,000 வணிகர்கள் பட்டாசு வணிகம் செய்து வருகிறார்கள். மிகப்பெரிய வேலைவாய்ப்புமிக்க தொழிலாகவும், தமிழக அரசுக்கு வருவாய் வழங்கும் தொழிலாகவும் பட்டாசு வியாபாரம் உள்ளது. மேலும் பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் உரிமம் பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே கடந்த வருடத்தில் அமைத்துக் கொடுத்தது போல் விண்ணப்பத்தை நேரில் அளிப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

காலியாக உள்ள மைதானத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்காலிக ஷெட் வசதி அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை மிகவும் நெருக்கமாக இருக்கிற காரணத்தினால் காலதாமதமின்றி உடனடியாக உரிமங்களை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பான மற்றும் தற்காலிக உரிமம் ஒரே மாதிரியான கோட்பாடு கடைப்பிடிக்க உரிய அறிவுறுத்தல் இருக்குமாயின் உரிமங்கள் காலதாமதமின்றி உடனடியாக கிடைப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.

Advertisement