தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதிலமடைந்த தாழையூத்து-தச்சநல்லூர் சாலையால் விபத்து அபாயம்

Advertisement

*சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கேடிசிநகர் : நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சுவாமி நெல்லையப்பர் கோயில் வரை சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதுபோல் புறநகர் நான்குவழிச்சாலையிலும் ஒரு சில இடங்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது.

நெல்லை தாழையூத்து மாடர்ன் ரைஸ்மில் பகுதியில் இருந்து தச்சநல்லூர் வரையிலான நான்கு வழிச்சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகள் (மேனுவல்) சாலை மட்டத்தைவிட சுமார் அரைஅடி உயரத்தில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளமான சாலையை கடக்கும்போது பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகின்றது. எனவே தாழையூத்து மாடர்ன் ரைஸ்மில் பகுதியில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News