தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனுஷ்கோடியில் மணல் புயல்: காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!

Advertisement

ராமநாதபுரம்: தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து மணல் புயல் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து மணல் புயல் வீசி வருவத்தினால் தனுஷ்கோடிக்கு செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் பலத்த காற்றின் காரணமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். மேலும், மணல் புயல் வீசி வருவதனால் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மணல் புயல் காரணமாகவே அதிக நேரம் சுற்றி பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisement