தனுஷ்கோடியில் மணல் புயல்: காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!
Advertisement
இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து மணல் புயல் வீசி வருவத்தினால் தனுஷ்கோடிக்கு செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் பலத்த காற்றின் காரணமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். மேலும், மணல் புயல் வீசி வருவதனால் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மணல் புயல் காரணமாகவே அதிக நேரம் சுற்றி பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Advertisement