மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையையொட்டி அக்.25ம் தேதி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனா ஆகியோர் எடுத்துச்சென்றனர். தற்போது விழா முடிந்ததும் தேவரின் தங்கக்கவசத்தை இருவரும் நேற்று மதியம் மதுரை வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.


