தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவதானப்பட்டி அருகே லோடு வேன்-பைக் மோதல்: தந்தை, மகன் பலி: புத்தாண்டு நாளில் சோகத்தில் மூழ்கியது கிராமம்

Advertisement

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே, லோடுவேன்- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மகன் வீரமுத்து (25). திருமணமானவர். தந்தை, மகன் ஊர்ப்பகுதியில் உள்ள தோப்பில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று சொந்த வேலைக்காக இருவரும் ஜி.கல்லுப்பட்டியில் இருந்து பைக்கில் பெரியகுளம் சென்றனர். பின்னர் நள்ளிரவில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, வீரமுத்து ஓட்டி வந்தார்.

தேவதானப்பட்டி அருகே, டி.வாடிப்பட்டி பிரிவில் வந்தபோது, எதிரே தேனி நோக்கி சென்ற லோடுவேனும், பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து தேவதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று இரு உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லோடுவேன் டிரைவரை தேடி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் விபத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News