தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை இயக்குநர் ஆபீசில் ரூ.2.52 லட்சம் சிக்கிய விவகாரம் சென்னை தீயணைப்பு வீரர் சிக்கினார்

நெல்லை: நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் ​கடந்த மாதம் 18ம்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி 2 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினர். அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் சிக்கியதையடுத்து, தூத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ​இந்நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்த மேலப்பாளையம், சிவராஜபுரம், அண்ணாநகர், 2வது தெருவைச் சேர்ந்த விஜய் என்வர் மும்பையில் கைதானார். அவர் ரூ.40 ஆயிரத்தை கூலியாக பெற்று பணத்தை வைத்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு நிலைய வீரர் பாளை. விஎம் சத்திரத்தைச் சேர்ந்த மூர்த்தி, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் முருகேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் விஜய் தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க தீயணைப்பு வீரர் முருகேஷ் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Related News