தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

Advertisement

புதுச்சேரியில்: டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு நடைபெறும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சர்வதேச பள்ளி மற்றும் இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் வடோதரா ஹிப்னாசிஸ் அகாடமி இணைந்து நடத்தும் சர்வதேச 2வது உளவியல் மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நேற்று துவங்கியது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மாநாட்டை துவக்கி வைத்து, மாணவர்களின் உளவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்கள் எழுதிய புத்தகங்களை வெளியிட்டார்.

மேலும், வாழ்நாள் சாதனையாளர், தலைமைத்துவ விருதுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் முருகன் பேசுகையில், ஆசிரியர்கள், திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். திருக்குறள் பொருள் நிரந்தரமானது. இது, தமிழின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு, இணையதளம், விஎல்எஸ்ஐ தொழில்நுட்பம், சாட்ஜிபிடி என எதுவாக இருந்தாலும் திருக்குறளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு உலக நாடுகளில் இருந்து தமிழ் சான்றோர்களின் விருப்பமான திருக்குறள் மாநாட்டை டெல்லியில் நடத்துவதற்கான பிரவுசரை வெளியிட்டுள்ளேன். விரைவில் திருக்குறள் மாநாட்டிற்கான தேதி அறிவிக்கப்படும். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் திருவள்ளுவரையும், திருக்குறளின் பெருமையையும் கொண்டு செல்கிறார். தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி கூறியபடி 4 மாதத்தில் 5க்கும் மேற்பட்ட நாடுகளில் கலாச்சார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement