தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்

Advertisement

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்புவதாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 20ம் தேதி மற்றும் இன்று காலை நடைபெற்ற கொலீஜிய கூட்டம் அடிப்படையில் இத்தகைய உத்தரவை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது எரிந்த நிலையிலான பலகோடி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், ஊழல் புகார் விசாரிக்கப்படுவதற்காக கமிட்டி அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பார் கவுன்சில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவிற்கு உயர்நீதிமன்றத்தின் பார் கவுன்சில் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில், யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தவொரு நீதி பொறுப்பும் வழங்கப்பட கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இது போன்ற எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கான பரிந்துரையும் உச்சநீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News