தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Advertisement

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 175 படகுகளையும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ மற்றும் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இருந்து பல்வேறு மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், சுதா, விளவங்காடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் அமைப்பினர் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளே இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

Advertisement