தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி 2வது நாளாக போலீசார் தீவிர சோதனை

*கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

Advertisement

கடலூர் : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 2வது நாளாக தீவிர சோதனை நடந்தது. மேலும், கடற்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லி வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரில் ஆல்பேட்டை, சாவடி சோதனை சாவடிகள் மற்றும் உழவர் சந்தை, கடலூர் முதுநகர், பச்சையாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், பாரதி சாலையில் நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிவிரைவு படை வீரர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளார்களா, ஆட்சேபகரமான பொருட்களை கொண்டு செல்கிறார்களா என சோதனை செய்தனர்.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் சோானையில் ஈடுபட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகள் மற்றும் மீன்பிடித்து கரை திரும்பிய படகுகளை சோதனையிட்டனர். மேலும், கடல் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என விசாரணை

மேற்கொண்டனர்.

* ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

* வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

* சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளார்களா, ஆட்சேபகரமான பொருட்களை கொண்டு செல்கிறார்களா என சோதனை செய்தனர்.

Advertisement

Related News