தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.20 கோடி கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து காரிலேயே 7 பேர் தற்கொலை: அரியானாவில் சோகம்

Advertisement

சண்டிகர்: ரூ.20 கோடி கடன் தொல்லையாலும் மன உளைச்சலாலும் தொழிலதிபர், அவரது மனைவி, 3 குழந்தைகள், தந்தை, தாய் என 7 பேரும் குடும்பத்துடன் காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது. அரியானாவின் பஞ்ச்குலா செக்டார் 27 பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் கார் ஒன்று நின்றிருந்தது. அவ்வழியாக வந்த ராணா என்பவர், கார் கதவில் துணி சிக்கியிருப்பதை பார்த்து சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தார்.

அப்போது காரில் சிலர் வாயில் ரத்தத்துடன் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு நபர் மட்டும் பாதி மயக்கத்தில் இருந்துள்ளார். அவர், ‘‘குடும்பத்துடன் நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். இன்னும் 5 நிமிடத்தில் நானும் இறந்து விடுவேன்’’ என கூறி உள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்தனர். அரை மயக்கத்தில் இருந்த நபர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.

காரிலிருந்து 6 பேரின் சடலங்களை போலீசார் மீட்டனர். இவர்கள் பஞ்ச்குலாவின் சக்ரேதி பகுதியில் வசிக்கும் பிரவீன் மிட்டல் (41) என்பவரின் குடும்பத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர்கள் அவரது மனைவி, இரட்டை மகள்கள், ஒரு மகன், தந்தை, தாய் என்பது தெரிந்தது. பிரவீன் மிட்டல் பாதி மயக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை கூறி உள்ளார். போலீஸ் விசாரணையில், பிரவீனுக்கு கடந்த 10 ஆண்டாகவே தொழில் நஷ்டம் காரணமாக ஊர் ஊராக குடும்பத்துடன் அலைந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்த இக்குடும்பத்திற்கு ரூ.20 கோடி வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் அவர்களால் முடிந்த அனைத்து சொத்துக்கள், பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டாக டாக்சி ஓட்டி வந்த பிரவீன் மிட்டல் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுள்ளனர். இந்த விரக்தியில் குடும்பத்துடன் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News