தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

Advertisement

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமம், பழண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (41). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தாய், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை தீனதயாளன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மனைவி சுப்ரியா பல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்றார். பிள்ளைகள் கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அவரது தாய் கோவிந்தம்மாள் அதே பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்றார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு கோவிந்தம்மாள், 100 நாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த கம்மல், வளையல் என மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement