தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெஞ்சல் புயல் மழையால் மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடி அகற்றம்: சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Advertisement

திருவள்ளூர்: பெஞ்சல் புயல் மழையால் மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பெஞ்சல் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இதேபோல், திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவள்ளூர் கோட்ட பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில், அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் ஜி.மகேஸ்வரன் தலைமையில் உதவி பொறியாளர் எஸ்.கார்த்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பட்டாபிராம், இந்து நகரில் தேங்கி நின்ற மழை நீரை நேற்றுமுன்தினம் உடனடியாக அகற்றி சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டனர்.

அதேபோல், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயல் மணிகண்டபுரம், அனுமன் நகர் மற்றும் பாலாஜி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் பெஞ்சல் புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக நந்தியம்பாக்கம் ஊராட்சி கொங்கி அம்மன் நகர், நேதாஜி நகர், ஆதிலட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி மற்றும் வார்டு உறுப்பினர் வள்ளி வில்வநாதன் ஆகியோர் பொக்லைன் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் எங்கெங்கு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதோ அங்கு சென்று ஊராட்சி தலைவருடன் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Advertisement

Related News