தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் அருகே வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக 13 பேருக்கு சம்மன்!

Advertisement

கடலூர்: கடலூரில் நேற்று தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மற்றொரு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து ரயில்வே உயரதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்டை ரயில்வே போலீசார் சார்பில் முதற்கட்டமாக 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிகள் அஜித்குமார், விமல், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர், ரயில் ஓட்டுநர் சக்திகுமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் மீனா உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி விமல் இன்று விசாரணைக்காக சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் திருச்சி கோட்டை ரயில்வே அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் முடிவிற்கு பிறகு அடுத்தகட்ட விசாரணையை துவக்கி அதன்பின் எவ்வாறு விபத்து நடந்தது என்பது குறித்து தெரியவரும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News