தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கிய ரூ.4,189 கோடி ‘கறுப்பு பண’ சொத்து பறிமுதல்: 44,000 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதுடெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கப்பட்ட ரூ.4,189 கோடி மதிப்பிலான கறுப்புப் பணத்தை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும், நிதி மோசடிகளைத் தடுக்கவும் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2002ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களை முடக்கவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரவும் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது.

Advertisement

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நிதி மோசடிகள், அந்நியச் செலாவணி விதிமீறல்கள் மற்றும் கறுப்புப் பணப் புழக்கம் ஆகியவற்றை அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைப் பயன்படுத்தி பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பாக அமலாக்கத்துறை மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ.4,189.89 கோடி மதிப்பிலான கறுப்புப் பணம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முறையான தகவல்கள் இன்றி மறைமுகமாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்ட 44,057 நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ‘இந்திய நிதி அமைப்பில் நடைபெறும் மோசடிகள் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News