Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

கம்பம்: கம்பத்தில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்றிரவு கூடலூர் செல்வதற்காக, கம்பம் அரசமரம் அருகே பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது கூடலூர் கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (55) என்பவர் முன்விரோதம் காரணமாக அம்பிகாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கினார். காயமடைந்த அம்பிகாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து, குபேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.