தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: ‘டிட்வா புயல்’ காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு, வெளியூர் மாடுகள் வரத்து குறைந்ததால், விற்பனையும் மந்தமானது. பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் கடந்த 3 வாரத்துக்கு முன்பு வரை ரூ.230 கோடி வரை வர்த்தகம் நடந்து வந்தது. அதன்பின் கடந்த 2 வாரமாக மாடுகள் வரத்து குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து கார்த்திகை மாதம் துவங்கியதால், சபரிமலை சீசன் ஆரம்பித்தது.

Advertisement

இதனால், கேரள மாநில வியாபாரிகள் வருகையும் குறைந்து விற்பனை மந்தமானது. இந்நிலையில், இன்று நடந்த சந்தைக்கு, வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் ‘டிட்வா புயல்’ காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன்காணமாக பொள்ளாச்சி சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்தும் 800க்கும் குறைவான மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் நோன்பு கடைபிடிப்பதால், வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாகி, மாடு விற்பனையும் மந்தமானது. இதில் இன்று காளை மாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் என கடந்த மாதத்தைவிட, ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை குறைந்த விலைக்கு மாடுகள் விற்பனையானது. மாடு விற்பனை மந்தத்தால், இன்று ரூ.1 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News