தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் நலனுக்காக சில திட்டங்களை தடுக்கக் கூடாது: தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கருத்து!

சென்னை: மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை, சில காரணங்களுக்காக தடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை ஆவடியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ரூ. 51 லட்சம் செலவில் அமைக்கப்படும் இந்த மையத்தில், நூற்றுக்கணக்கான நாய்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போதுமான கழிவுநீர் வசதிகள் செய்யப்படாமல் அமைக்கப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அப்போது அரசு தரப்பில், “பாதுகாப்பான முறையில் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்த பின்னரே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள் நலனுக்கான சில திட்டங்களை நாம் அனுமதித்தே ஆக வேண்டும். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மையம் அமைக்கப்படுகிறது. மையத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளை ஆக்கிரமிப்புகளாக கருத முடியாது” என தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement

Related News