தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Advertisement

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி குன்னூர் தாலுகாவில் மட்டும் இன்று (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். முன்னதாக கனமழை கொட்டி தீர்த்ததால் குன்னூர் ரயில் பாதையில் பாறை கற்கள் சரிந்து விழுந்துள்ளன.

இதனை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குந்தாவில் 4.2 செ.மீ, அருப்புக்கோட்டையில் 2.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 3.7 செ.மீ மழை பெய்திருக்கிறது.

தூத்துக்குடியில் 2.1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுடிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

Advertisement