தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் - கோத்தகிரி மாற்றுப்பாதையில் ரூ.2 கோடியில் தார் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

குன்னூர் : மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக குன்னூர் - கோத்தகிரி மாற்றுப்பாதையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலைகள் சீரமைப்பு, சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகள், தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குன்னூரில் இருந்து ஸ்டாப் காலேஜ், பாரத் நகர், பந்துமை வழியாக கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகளை சீரமைக்கும் பணிகளும், தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் கோடை காலங்களில் குன்னூர் நகரம் மற்றும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வர வசதியாக இருக்கும் என்பதால் சிறந்த முறையில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement