தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூரில் கடந்த ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

குன்னூர்: குன்னூர் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் முக்கிய பகுதிகளான பெட்போர்டு, உபாசி, சிம்ஸ் பூங்கா, உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்ததோடு‘, இரவு நேரங்களில் பெரும்பாலான மக்கள் கரடிக்கு அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனால், குன்னூர் நகர பகுதி மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதையடுத்து குன்னூர் சுற்றுப்பகுதிகளில் கரடி சுற்றித்திரிந்த 4 இடங்களில் குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்தனர். 10 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கடந்த ஓராண்டாக கரடியை பிடிக்க தீவிர முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால், கரடி எந்த கூண்டிலும் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், நேற்று காலை கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் வனத்துறை வைத்திருந்த இரும்பு கூண்டில் கரடி சிக்கியது. இதை ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு நேற்று காலை கூண்டில் சிக்கிய கரடி, குன்னூரில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. கூண்டைத் திறந்தவுடன் கரடி வாகனத்திலிருந்து குதித்து வனப்பகுதிக்குள் ஓடிய வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டனர்.

குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்து.

Advertisement

Related News