தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முழுவதும் நீக்க வேண்டும்

Advertisement

நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்தது. நகையின் மதிப்பில் 75சதவீதம் மட்டுமே வங்கி கடனாக வழங்க வேண்டும். 22 காரட் நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். அடகு வைக்கும் அனைத்து நகைகளுக்கும் கட்டாயம் ரசீது வேண்டும் என்று 9 விதிகள் மிகவும் கடுமையாக இருந்தது. இந்த புதிய விதிமுறைகள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பேரிடியாக இருந்தது.

தங்கம் என்பது அவசர தேவைக்கு உதவும் அடகு பொருளாகவே கருதப்படுகிறது.

இந்தச்சூழலில் புதிய விதிமுறைகள், மக்களை அபாய வழிக்கு திருப்பிவிடும். உதாரணமாக நிபந்தனைகள் இல்லாத கடன்பெறுவதற்கு ஆன்லைன் செயலிகளையும், கந்துவட்டிகாரர்களையும் நாடுவது அதிகமாகும். இதைகருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒன்றிய நிதி அமைச்சகம், புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, இரண்டு லட்சத்துக்கும் குறைவான நகை கடன் பெறுபவர்களுக்கு, புதிய விதிகளிலிருந்து தளர்வு அளிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை 1.1.2026க்கு பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தது. இதனை ஏற்ற ரிசர்வ் வங்கி, இரண்டு லட்சத்திற்கும் குறைவான நகை கடன் வாங்குவதற்கு, புதிய விதிகள் பொருந்தாது என கூறியுள்ளது. இருந்த போதும் இந்த விதிமுறை தளர்வால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்கின்றனர் பொருளாதார மேம்பாட்டு நிபுணர்கள்.

அதாவது 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக நகை கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் நகை கடன் பெற்றால், புதிய விதிகள் தான் பொருந்தும். உதாரணமாக அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நகை கடன் பெற வேண்டும் என்றால், 2லட்சம் ரூபாய்க்குரிய விதிகளில் தான் பெற முடியும். ஒரு அறுவை சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றால், 3அல்லது 3 முறைக்கு மேல் அடகு வைத்து தான், பணம் பெற முடியும். இதனால் தேவையில்லாத காலவிரயம் ஏற்படும்.

மேலும், தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கி இருக்கும் நிலையில், கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை செலுத்த, தங்கத்தை பணமாக மாற்ற வேண்டிய நிலை பல பெற்றோருக்கு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் சிரமம் ஏற்படும். எனவே, இந்த விதிமுறைகள் அனைத்தையும் முழுவதுமாக நீக்க வேண்டும். அப்போது தான், அவசர தேவைகளுக்கு மக்கள் பணத்திற்காக அலைய வேண்டிய நிலை இருக்காது. மேலும், நகையின் தரம் மற்றும் 22 காரட் நகையாக மாற்றுவதற்கும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் நடப்பாண்டு (2025) முழுவதும் இந்த விதிமுறைகளை அமல்படுத்தக்கூடாது என்கின்றனர் சமூக மேம்பாடு சார்ந்த பொருளாதார நிபுணர்கள்.

Advertisement

Related News