தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை அரசு அதிரடி: அதானி மின்திட்டங்களை மறுஆய்வு செய்ய குழு

Advertisement

புதுடெல்லி: இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான அதானிக்கு சொந்தமான நிறுவனம் இலங்கையில் மன்னார், பூனேரி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் இலங்கை அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது மன்னார், பூனேரி மாவட்டங்களில் அதானி குழுமம் மேற்கொள்ள இருக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வௌியாகின. இதனால் இந்திய பங்குச்சந்தையின் அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 6% வீழ்ச்சியடைந்தன.

இந்நிலையில் மன்னார், பூனேரியில் அதானி குழுமம் மேற்கொள்ள உள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசு அதிகாரி நலிந்த ஜயதிஸ்ச, “மன்னார், பூனேரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்வது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக அதுபற்றி மறுபரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். ஆய்வு பணிகள் முடிந்ததும் முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

Advertisement