தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்

சென்னை: 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.9.45 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி இணைய வழியாக விருப்பப் பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Advertisement

இந்த பொது இடமாறுதல் கலந்தாய்வில் மொத்தம் 265 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 218 தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதிவாய்ந்த 74 ஆசிரியர்களுக்கும் மற்றும் 55 ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடமாறுதலுக்கான ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வழங்கினார்.

மேலும், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் என 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்காக 2025-26ம் ஆண்டுக்கு ரூ. 9.45 கோடி நிதி ஒப்பளிப்பு செய்ததற்கான ஆணைகளை கல்லூரி முதல்வர்களிடம் வழங்கினார்.

Advertisement

Related News