தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் ஆபீஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு ‘இ-மெயில்’ வந்தது. அதில், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் கோவை கமிஷனர் அலுவலகம் ஆகியவை பகல் 1 மணிக்கு வெடிக்கும். சக்திவாய்ந்த வெடி பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது, எனக்கூறப்பட்டிருந்தது. இதுபற்றி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனையை நடத்தினர். ஆனால், எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் கோவை, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலங்கள் மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்தனர்.

இதில் வெடிகுண்டுகள் ஏதுவும் சிக்கப்படாததால் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த மிரட்டல் இ-மெயில் புரளியென தெரியவந்தது. மிரட்டல் இ-மெயிலில் மதுரையை சேர்ந்த ஒருவரது பெயரும், சென்னையில் ஒரு முகவரியை குறிப்பிட்டும், அங்கு ஒரு தெருவிற்கு பெயர் மாற்றம் மேற்கொண்டதை கண்டித்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. அதனடிப்படையில் சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement