தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடை கேட்டு 9 கிராம மக்கள் மனு

Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மக்கள் குறைதீர் கூட்டத்தில், அதிகாரிகளிடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆதனூர், தெத்தம்பட்டி, அரங்காபுரம், பளிஞ்சரஅள்ளி, நலப்புரம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, நல்லாம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆதனூரில் டாஸ்மாக் செயல்பட்டு வந்தது.

நெடுஞ்சாலையில் செயல்பட்டதால் அகற்றப்பட்டது. இதனால் எங்கள் ஊரில் வசிப்பவர்கள், மது வாங்க தர்மபுரிக்கு 24 கி.மீ. தூரத்திற்கும், ஜக்கம்பட்டிக்கு 20 கி.மீ. தூரத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தொலைதூரம் சென்று மது அருந்தி விட்டு வரும் போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே, எங்கள் ஊரிலேயே டாஸ்மாக் கடை இருந்தால் இது தடுக்கப்படும். எனவே, அஞ்சேஅள்ளி ஊராட்சி பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement