தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைக்குந்தா, கல்லட்டி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றம்

ஊட்டி : உல்லத்தி ஊராட்சி சார்பில் தலைகுந்தா, பைன் பாரஸ்ட் மற்றும் கல்லட்டி சாலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை பயன்படுத்தி விட்டு சாலையோரங்கள் வனப்பகுதிகளுக்குள் வீசி சென்று விடுகின்றனர். குறிப்பாக உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட தலைக்குந்தா முதல் பைன் பாரஸ்ட் வரையிலான சாலையோர பகுதிகள், கல்லட்டி மலைப்பாதையில் வீசி விடுகின்றனர். இவற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில் உல்லத்தி ஊராட்சி சார்பில் தொடர்ச்சியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று ஊட்டி எச்பிஎப் முதல் கல்லட்டி மலைப்பாதை, தலைக்குந்தா முதல் பைன் பாரஸ்ட் வரையில் சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் வீசி எறிய வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டது.

Advertisement