தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு என புகார்!!

கோவை: அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கேண்டீனில் அங்கு தங்கி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தரமற்ற, சுத்தம் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த உணவில் பூச்சிகளும், புழுக்களும் அவ்வப்போது வருவதால் உணவு உட்கொண்ட பிறகு உடல்நல கோளாறு ஏற்படுகிறது.

Advertisement

இது தொடர்பாக புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று மாலை கல்லுரி வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த கேண்டீனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த சமையல் அறை மற்றும் அங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள உணவுகள் சுத்தமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான விளக்கத்தை அந்த தனியார் ஒப்பந்தத்தை ஏற்றுள்ள ஒப்பந்ததாரர்கள் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவு மற்றும் சமையல் நடைபெறும் இடம் ஆகிய புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News