தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இருப்பில் உள்ளது விற்பனைக்கு வருவதால் தேங்காய் டன்னுக்கு ரூ10 ஆயிரம் சரிந்தது

சேலம்: விவசாயிகள், வியாபாரிகளிடம் இருப்பில் உள்ள தேங்காய் விற்பனைக்கு வருவதால் ஒன்றரை வாரத்தில் தேங்காய் டன் விலை ரூ10 ஆயிரம் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் தேங்காய் பறிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், இதைதவிர வட மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் பாதித்தது. கடந்த ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரம் தேங்காய் வரத்து சீராக இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதமாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ேதங்காய் விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து சரிந்து, கடந்த இரண்டரை மாதமாக 50 சதவீதம் விலை அதிகரித்து இருந்தது.

தற்போது இருப்பில் உள்ள தேங்காய் விற்பனைக்கு வருவதால் தேங்காய் விலை சரிந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 200 முதல் 300டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் தேங்காயை ஆத்தூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூரை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த இரு மாதமாக தமிழகம் முழுவதும் பரவலாக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் அறவே சரிந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து தான் வட மாநிலங்களுக்கு தேங்காய் செல்கிறது. விளைச்சல் பாதிப்பு, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை என்பதால் தேவை அதிகரித்து இருந்தது.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவில் தேங்காய் விலை அதிகரித்தது. விலை உயர்வு காரணமாக தேங்காய் விற்பனையும் மந்தமாக இருந்தது. இந்தநிலையில் விவசாயிகள், வியாபாரிகளிடம் இருப்பில் உள்ள தேங்காய் கடந்த ஒன்றரை வாரமாக விற்பனைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக நவம்பர் 1ம் தேதி ஒரு டன் தேங்காய் ரூ60 ஆயிரத்திற்கு விற்றது. நடப்பு வாரத்தில் டன் ரூ10 ஆயிரம் வரை சரிந்து, ரூ50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு தேங்காய் ரூ12 முதல் ரூ30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.