தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவல் சண்டை நடத்திய கும்பல் தப்பியோட்டம்

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, செங்கரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சென்னை மற்றும் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை, தண்டலம், பெரம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி.சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி மற்றும் எஸ்.ஐ. பிரசன்ன வரதன், தனிப்படையை சேர்ந்த எஸ்ஐக்கள் ராவ்பகதூர், செல்வராஜ் மற்றும் போலீசார் செங்கரை கிராமத்திற்குச் சென்றனர்.

அப்போது, அங்கிருந்த வாலிபர்கள் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் வாலிபர்கள் தாங்கள் எடுத்து வந்த பைக்கை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர், போலீசார் சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்த 8 பைக்குகளை கைப்பற்றி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சேவல் சண்டை நடத்தி தப்பியோடிய 8 பேரை ஊத்துக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement