தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெட்டிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகள் விறுவிறுப்பு

Advertisement

நெல்லை: பெட்டிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்லை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுநாள் வரை 8 பெட்டிகளோடு இயங்கி வருகிறது. இப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பயணிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில், தெற்கு ரயில்வே நாளை 15ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே இரு மார்க்கத்திலும் 11ம் தேதி முதல் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகளை இணைக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு சென்னைக்கு ஊருக்கு திரும்புவோர் வந்தே பாரத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை என்பது நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரசிற்கு விடுமுறை தினமாகும். நாளை 15ம் தேதி புதன்கிழமை கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

தென்மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளோடு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிலும் 17ம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ம் தேதி ஞாயிற்று கிழமை சென்னைக்கு செல்ல விறுவிறுப்பு மளமளவென நடந்து முடிந்துள்ளது. பொங்கல் முடிந்து சென்னைக்கு செல்வோர், கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூட பராவாயில்லை, ரயிலில் சென்னை செல்ல வேண்டும் என்ற நோக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் முன்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement