தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை பிடிக்க ஒன்றிய உள்துறைக்கு கடிதம்: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்

சென்னை: சென்னை, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு நாளும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் மிரட்டல் விடுக்கும் போது அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் நேற்று வரை 342 மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்மின்னஞ்சல் நெட்வொர்க் வெளிநாடுகளில் இருப்பதால் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க ஒன்றிய உள்துறைக்கு சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தூதரகம் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக தூதரக மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் படி அவர்களுக்கு உரிய விளக்கமும் பாதுகாப்பும் உறுதி செய்துள்ளோம். இதுபோன்ற மிரட்டல்கள் சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement