தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைப்பூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்து வரும் சித்தேரி

Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: வைப்பூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்து வரும் சித்தேரியை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சித்தேரி உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, அப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், வைப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் ஆயில் மற்றும் ரசாயனம் கலந்த கழிவுநீர், நீர்வரத்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இவை ஏரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சென்று ஏரிநீரை மாசுபடுத்தி வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் ரசாயனம் கலந்த கழிவுநீரால் ஏரியில் உள்ள செடிகள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் ஏரிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாசடைந்த நீரை கால்நடைகள் பருகும்போது பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடிநீரும் பாதிப்படையும் சூழல் உருவாகும் என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஏரியில்விடும் தனியார் தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News