தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கை, கால்களை கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு குழந்தை கொடூர கொலை: சொத்து பிரச்னையில் பெண் வெறிச்செயல்

Advertisement

ராதாபுரம்: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவரது மனைவி ரம்யா (25). இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் சுஜித் (6) என்ற மகனும், சஞ்சீவ் என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. விக்னேஷ் தினக்கூலிக்கும், ரம்யா 100 நாள் வேலைத்திட்ட பணிக்கும் சென்று வருகின்றனர். நேற்று காலை 8 மணியளவில் ரம்யா வேலைக்குச் சென்றுள்ளார். சுஜித்தை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய விக்னேஷ், வீட்டிற்குப் பின்புறம் தண்ணீர் எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். காலை 9 மணியளவில் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை சஞ்சீவ், 9.30 மணியளவில் மாயமானான். எங்கு தேடியும் கிடைக்காததால், ராதாபுரம் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். போலீசார் வந்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷ் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் (50) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம்மாள் குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்னை இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் தங்கம்மாளின் வீட்டில் சோதனை செய்த போது 3 வயது குழந்தை சஞ்சீவை அங்குள்ள வாஷிங்மெஷினிலிருந்து சாக்குப்பையில் சடலமாக மீட்டனர். குழந்தையின் சடலத்தை பார்த்து பெற்றோரான விக்னேஷ், ரம்யா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது போலீசிடமிருந்த தப்ப முயன்ற தங்கம்மாளை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தங்கம்மாள் குழந்தையின் கைகளையும், கால்களையும் கட்டி சாக்குமூட்டையில் சுற்றி வாஷிங் மெஷினில் போட்டதில் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது. குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காட்டிக்கொடுத்த குழி: சிறுவனை கொலை செய்த தங்கம்மாள் உடலை இரவில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம் என்று வீட்டின் பின்புறத்தில் தென்னை மரம் அருகில் குழி தோண்டி வைத்துள்ளார். காணவில்லை என புகார் வந்ததும் போலீசார் தங்கம்மாள் வீட்டில் தேடியபோது அங்கிருந்த குழி அவரை காட்டிக்கொடுத்துள்ளது.

 

Advertisement

Related News