தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘குழந்தை பிறப்பு மகளிர் இல்லாவிட்டால் சாத்தியமில்லை’ அரசு ஊழியர்கள் 6 குழந்தைகளை பெற்றாலும் மகப்பேறு விடுமுறை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Advertisement

திருமலை: அரசு ஊழியர்கள் 6 குழந்தைகளை பெற்றுக்ெகாண்டாலும் அவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு, இளம் இந்தியாவை இலக்காக கொண்டு, மக்கள் தொகை மேலாண்மை குறித்து கடந்த சில மாதங்களாக பிரசாரம் செய்துவருகிறார். அதற்கேற்ப சமீபத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற தேர்தல் விதியை அவர் நீக்கி மாற்றம் செய்தார்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்க்கபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது:

உலக நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அந்த நாடுகள் வருங்காலத்தில் இளைஞர்கள் இல்லாத நாடாக மாறும். எனவே மக்கள் சதவீத மேலாண்மை கட்டாயம் இருக்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறைக்கென 6 மாத விடுமுறை உள்ளது. அதுகூட 2 குழந்தைகளுக்குள் இருந்தால் மட்டுமே தரப்படுகிறது. ஆனால் இதனை இப்போது மாற்றி அறிவிக்கிறேன்.

இனி, அரசு ஊழியர்கள் 3 அல்ல, 4 அல்ல, 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறை 6 மாதம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும். மகளிர் சக்தி என்பது யாருக்கும் கிடைக்காத வரம். குழந்தை பிறப்பு மகளிர் இல்லாவிட்டால் சாத்தியமில்லை. பெண்கள்தான் உலகை ஆளும் சக்தி. எனவே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று வருங்காலத்தில் கவுரவத்துடன் வாழவேண்டும். அத்துடன் மக்கள்தொகை நிர்வாக சக்தியும் நாட்டிற்கு வேண்டும். இவ்வாறு பேசினார்.

Advertisement