தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று முதல் 29ம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Advertisement

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் இன்று (நவ 25ம் தேதி) முதல் 29ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பள்ளி அளவிலான இடைப் பருவத் தேர்வுகள் காரணமாக இந்த விழிப்புணர்வு வாரத்தை நவம்பர் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை கொண்டாட அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு வாரத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது ஏதேனும் ஒரு குழு பொறுப்பு ஆசிரியர் ‘மாணவர் மனசு’ திட்டம் சார்ந்து காலை இறை வணக்க கூட்டத்தில் உரையாற்ற வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு பள்ளி அளவிலான குழுவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதி 1, ஆசிரியரல்லா பணியாளர் 1, வெளிநபர் 1 ஆகியோர் இடம் பெற்றுள்ளதால், இந்த குழு கூட்டத்தை விழிப்புணர்வு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் பெற்றோர்கள் வசதிக்கு ஏற்ப நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் மனசு பெட்டியில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களுடன் விவாதிக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் இடையே குழந்தைகள் உதவி மையம் எண் 1098 மற்றும் 14417 ஆகிய எண்கள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இணைய தள பாதுகாப்பு, மாணவர்கள் இணைய தளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது மற்றும் இணையதள பாலியல் வன்முறைகளை தவிர்ப்பது எப்படி என்றும், மகிழ் முற்றம் செயல்பாடாக குழு வாரியாக விவாதம் நடத்தி, வகுப்பறையில் காட்சிப்படுத்த வேண்டும். இதற்கான சுவரொட்டிகள் மாணவர்கள் அறியும் வகையில் வகுப்பறைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளின் தகவல் பலகையிலும், வகுப்பறைகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் மாணவர் உதவி எண், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணை குறிக்கவும் தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News