தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலுக்கு இடையூறால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய், உறவினருடன் கைது: பரபரப்பு வாக்கு மூலம்

Advertisement

பரமத்திவேலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, 4 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த உறவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (24), கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, பூவரசி(4) என்ற பெண் குழந்தை இருந்தது. இதனிடையே, சரத்(21) என்பவருடன், சினேகாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதையறிந்த முத்தையா, மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் சினேகா, சரத் இருவரும் குழந்தையுடன் நாமக்கல் வந்துள்ளனர். அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால், சினேகா மகளுடன், பரமத்திவேலூரை அடுத்துள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள தனது பெரியப்பா மகள் கோகிலா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மதியம், தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, குழந்தை பூவரசியை கிணற்றில் தூக்கி வீசி சினேகா கொலை செய்தார். அப்போது, கோகிலாவும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில், இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் சினேகா கூறுகையில், முறைப்படி விவாகரத்து பெற்று வந்தால், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சரத் கூறியதாகவும், தனது உறவுக்கு தடையாக இருந்ததால், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சினேகா, உடந்தையாக இருந்த கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதியின் உத்தரவின் பேரில், இருவரும் சேலம் மத்திய பெண்கள் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இதனிடைய, கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News