தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி அருகே டீ-யுடன் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை புரை ஏறி பலி..!!

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி அடுத்த குருபராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன் மற்றும் அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களின் 3 வயது பெண் குழந்தை வெங்கட லட்சுமி மேகலா. ஏற்கனவே 2 நாட்களாக உடல் நல குறைவு ஏற்பட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை துவைத்து சாப்பிட்ட போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தையை தூக்கி கொண்டு பதறி அடித்தபடி சென்றனர்.

பின்பு மேல்சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தைக்கு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டு பெற்றோரிடம் குழந்தை உடல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் மூச்சுத்திணறலே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தனர்.

 

Advertisement

Related News