மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
Advertisement
இதை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் இன்று வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பார்கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு பாராட்டி பேசுகின்றனர். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன.
Advertisement