தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை தேர்தல் ஆணையர் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

Advertisement

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீர்த்துப் போகும் வகையில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மாற்றாக ஒன்றிய அமைச்சர் இடம்பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கும் சூழலில், புதிய சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சூரியகாந்த் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முக்கிய வழக்கு உள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். அதனை கேட்ட நீதிபதிகள், பிற்பகலில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இரண்டாவது முறையாக மீண்டும் முறையீட்டை வைத்தார். அதில், “தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும். குறிப்பாக இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்பதால் தான் தொடர்ந்து முறையிடுகிறோம். மேலும் சில விஷயங்களுக்காக நீதிமன்றம் விதிவிலக்கு அளித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,” இந்த வழக்கை வேறு தேதியில் பட்டியலிடப்படுவது தொடர்பாக முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

Advertisement